வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
எண் எழுத்து இகழேல்
Enn Ezhuthu Egazhael
கணித அறிவியல், இலக்கியம் தூற்றாதே
Never despise learning on mathematical science and literature

===============
விவாதம்

hachappa:- கேள்வி: படிப்ப அவமதிக்க வேண்டாம்இன்னு சொல்ல வருதா (பள்ளி படிப்பு)? இதுக்கும் “ஓதுவது தொழியேல்” க்கும் என்ன வித்தாயசம்?

பதில்: இந்த பாடலில் “தூற்றாதே” என்பதை அலட்சியம் செய்யாதே என்று எடுத்துகொள்ளலாம். அதாவது, கணிதம் மற்றும் இலக்கியம் ஆகிய இருதுறைகளையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம்.

இதே கருத்துடன் திருக்குறள்,
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” :392

ஆக, எண் கற்பது அறிவை வளர்க்கும் என்றும் எழுத்து (இலக்கியம்) கற்பது பண்பாட்டை வளர்க்கும் என்றும் நினைத்து கொண்டால் சிறந்தது! இவை இரண்டும் தூற்றாதே என்று ஔவையும், இவை இரண்டும் ஒரு உயிருக்கு இரண்டு கண்கள் போன்றது என்று திருவள்ளுவரும் அறிவுருத்திகிறார்கள்.

உதாரணமாக: இன்றைய நிலையில் அதிகமானோர் மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி போன்ற துறைகளில் தான் நல்ல எதிர்கால வாய்ப்பு உள்ளது என்றும் இலக்கியம் போன்ற துறைகளில் அதிகம் நல்ல வாய்ப்பு இல்லை என்றும் எண்ணுகின்றனர், ஆகையால் இத்துறைகள் சார்ந்து கற்றுகொள்வதில்லை. இது போன்று அலட்சியபடுத்தி ஒதுக்கக்கூடாது என்று (எந்த காலத்திற்கும் பொருந்தும்படியாக!) அறிவுறுத்தபடுகிறது.

“ஓதுவது ஒழியேல்” என்ற பாடல் மூலம் தொடர்ந்து கற்க வேண்டும் என்றும் கற்கும் பழக்கத்தை கைவிடகூடாது என்று அறிவுறுத்தபடுகிறது. (கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு)

உதவி:
௧. பேராசிரியர் திரு ஜார்ஜ் ஹர்ட் தனது உரையின் நிறைவில் இந்த கருத்தை உதாரணமாக கூறுகிறார் – http://www.youtube.com/watch?v=gLBwj1YSRNc
௨. திருக்குறள் – http://www.thirukkural.com/2009/01/blog-post_8369.html
===============